துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு சிறைச்சாலை வளாகத்தினுள் துமிந்த சில்வாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வாக்குமூலம் அளிக்கும் சந்தர்ப்பத்தில் துமிந்த சில்வா சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள ‘தெமட்டகொட ருவன்’ எனப்படும் சந்தேகநபருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக 50 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவே துமிந்த சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

மார்ச் 17 அன்று தொடங்கப்பட்ட கேள்வி மனுக்கோரலின் (டெண்டர்) அடிப்படையில் இலங்கைக்கு...

வார இறுதி நாட்களில் எரிபொருள் விநியோகம் வழமை போல் தொடரும்

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள்...

புத்தளம் பிறை விவகாரம்: நாடு தழுவிய குழப்பத்தைத் தவிர்க்க அர்கம் முனீர் முன்வைக்கும் அதிரடி கோரிக்கைகள்

நேற்றைய தினம் புத்தளம் - கல்பிட்டி வீதி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பகுதியில்...