துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு சிறைச்சாலை வளாகத்தினுள் துமிந்த சில்வாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வாக்குமூலம் அளிக்கும் சந்தர்ப்பத்தில் துமிந்த சில்வா சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள ‘தெமட்டகொட ருவன்’ எனப்படும் சந்தேகநபருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக 50 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவே துமிந்த சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...