மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

Date:

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை (10) புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பேருந்து நிலையத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் திட்டமிட்ட குழுக்களின் செயல் என்றும் அவர் மேலும் கூறினார்.

பெண்கள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் முதல் நாளன்று கழற்றப்பட்டிருந்த நிலையில், அவை மீண்டும் பொருத்தப்பட்டன. எனினும், நேற்று (09) இரவும் இரண்டாவது முறையாக அக்குழாய்கள் கழற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதுடன், அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...