அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

Date:

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நேற்று (16) துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வருகை தந்த அவர்கள், ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையின் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை முன்னெடுக்கப்படவுள்ள சமாதானத்திற்கான பாதயாத்திரையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பாதயாத்திரையானது அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறுகிறது.

அதி வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட போதி மரக்கன்றுடன் இந்த பாதயாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ திட்டம், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸார், தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இந்த சமாதான பாதயாத்திரைக்கு ஆதரவு வழங்குகின்றன.

இந்த பாதயாத்திரையின் ஊடாக இலங்கையின் பௌத்த மரபுரிமைகள், பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறன்கள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...