யாழ் தேவி புகையிரத சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!

Date:

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி (Yal Devi) புகையிரதம் இன்று (11) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் யாழ் தேவி புகையிரதம் இயக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான புகையிரத சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இடம்பெறும்.

இந்த புகையிரதம் குளிரூட்டப்பட்ட 04 முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

-லத்தீப் பாரூக் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300...