நாடு முழுவதும் கனமழை: மண்சரிவு எச்சரிக்கை!

Date:

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கனமழையால் மண்சரிவுகள், கற்கல் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் சாரிந்து விழுதல் அபாயம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மழைநீர் விரைவாக வெளியேறுவதற்கு ஏதுவாக வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளைச் சுத்தம் செய்யவும், வீட்டின் மேலுள்ள கனமான மரங்களையும் அபாயகரமான பொருட்களையும் முடிந்தவரை அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலச்சரிவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் தென்பட்டால் உடனடியாக கிராம அலுவலருக்கும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசரநிலை ஏற்பட்டால், முடிந்தவரை விரைவாகப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுவதும், சுற்றியுள்ள மக்களுக்குத் தகவல் தெரிவிப்பதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் அளிப்பதும் மிகவும் முக்கியம் என்றும்  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...