வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

Date:

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் பின்வரும் பொருட்களை விற்பனை செய்வது, காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவது அரசாங்கத்தினால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள். ரெஜிபோர்ம், உணவுப் பெட்டிகள் மற்றும் லஞ்ச் சீட்.

பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் அனைத்து வகையான பொலிஎத்திலீன் அல்லது பொலிபுரோப்பிலீன் அலங்காரப் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மதம் அல்லது கலாசார நிகழ்வுகளின் போது இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா...

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை,...

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...