ஜந்தர் மந்தருக்கு மீண்டும் உயிர் ஊட்டிய ராகுல் காந்தி: மோடி இல்ல வீதியை முற்றுகையிட்டுப் போராட்டம்!

Date:

யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும் அது செய்திதான்.

2014-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. ராகுலின் தலைமையில் எம்பிக்களின் பட்டாளமே திரண்டிருக்கின்றது. விசிக எம்பிக்கள்தாம் மிஸ்ஸிங்.

ஆனால் என்ன நடக்கின்றது, ஏது நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே திமுதிமுவென்று மிகப் பெரும் மக்கள் திரள் பிரதமர் வீட்டுக்கு முன்பு திரண்டுவிட்டது.

பிரதமர் வீட்டு வீதியை இன்னொரு ஜந்தர் மந்தராக ஆக்கி, ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்துவிட்டிருக்கின்றார் ராகுல் காந்தி.

‘தர்மேந்திர பிரதானே பதவி விலகு’ என்று ஒலித்து வந்த முழக்கத்தை ‘மோடி, ஷா பதவி விலகு’ என்று மாற்றியமைத்து அடுத்தக் கட்டத்துக்குப் போராட்டத்தை நகர்த்தியிருக்கின்றார் ராகுல்.

கைது செய்கின்ற போது நடந்த களேபரத்தில் ராகுலின் மடிப்புக் கலையாத சட்டையில் மண்ணும் தூசும் படிந்துவிட்டன. அவருடைய மூக்கிலிருந்து ஒரு துளி இரத்தம் வழிந்திருக்கின்றது.

நீட் தேர்வுக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட மாணவர்களின் தியாகத்தோடும்,
மக்களவையை நோக்கி பேரணியாகச் சென்ற போது காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி இரத்தம் சொட்ட சொட்ட, மயங்கி விழுந்தும், காலிலும் கையிலும் மார்பிலும் முதுகிலும் தலையிலும் முகத்திலும் அடிபட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி வலியிலும் வேதனையிலும் துடிக்கின்ற மாணவர்களின் வலியோடும் ராகுலின் கசங்கிப் போன சட்டையையும் ஒரு துளி இரத்தத்தையும் ஒப்பிட முடியாதுதான்.
என்றாலும் கடைசியில் ஒரு வழியாக போராளியாக மாறிவிட்டார், ராகுல்..!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையின் கல்வி எதிர்காலத்திற்காக கைக்கோர்க்கும் ‘சம் சம் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘முஸ்லிம் ஹேண்ட்ஸ்’ அமைப்புக்கள்!

இலங்கையின் கல்வித் துறையை மேம்படுத்துவதையும், பரஸ்பர ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதையும் நோக்கமாகக்...

கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பிற்காக பேராசிரியர் பரீனா ருஸைக்கிற்கு ‘தமிழன்’ விருது!

அறிவை விதைத்து ஆராய்ச்சியை வளர்த்து சமூக முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு உயர்கல்வித் துறையில்...

மாவனல்லை IIMT வளாகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் M.M.M. நஜீம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மாவனல்லை IIMT வளாகத்தின் (IIMT Campus, Mawanella) புதிய உபவேந்தராகப் பேராசிரியர்...

நெல்சன் மண்டேலா தினம்: மட்டக்குளி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் விசேட திட்டம்!

சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தை முன்னிட்டு, கொழும்பு மட்டக்குளி  காக்கைத் தீவு...