பங்களாதேஷின் ‘ஈஸ்டர்ன் ரீஃபைனரி லிமிடெட்’ நிறுவனத்தைச் நவீனமயமாக்குவதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பங்களாதேஷ பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் (IsDB) தலைவர் முஹம்மது சுலைமான் அல் ஜாஸிர் ஆகியோர் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானதாகப் பிரதமரின் அலுவலகத் துணை ஊடகச் செயலாளர் மொஸ்தஃபா ஜுல்ஃபிகார் ஹசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒப்பந்தக் கையெழுத்துப் விழாவில் பேசிய பிரதமர் தாரிக் ரஹ்மான், இந்த ஒப்பந்தம் பங்களாதேஷின் மீது IsDB வங்கி வைத்துள்ள “நம்பிக்கையின் வெளிப்பாடு” என்று குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் வெறும் எரிசக்தித் துறை சார்ந்த முதலீடு மட்டுமல்ல; நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார மீள்தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சிக்குமான முதலீடு ஆகும்.
2034 ஆம் ஆண்டிற்குள் வங்கதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதையும், ஒரு உற்பத்தி மையமாகவும் பிராந்திய வாயிலாகவும் உருவெடுக்க வைப்பதே அரசின் இலக்கு.
ஆடை உற்பத்தியைத் தாண்டி, மின்னணுவியல், மருந்தகம், லேசான பொறியியல் மற்றும் பசுமைத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்த அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.
மேலும், நாட்டின் மேம்பாட்டு நிதித் தேவைகளுக்கு IsDB வங்கியை ஒரு நம்பிக்கையான பங்காளியாக வங்கதேசம் பார்க்கிறது என்றும், இந்த ERL திட்டம் இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் (IsDB) நிறுவன உறுப்பினரான பங்களாதேஷிற்கு, பல தசாப்தங்களாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அந்த வங்கி நிதியுதவி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
