நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை  29 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் ஏர்பஸ் (Airbus) ரக விமானங்களை கொள்வனவு செய்தபோது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், சந்தேகநபரான அவர் நீதிமன்றத்தில் இன்று முன்னலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, குறித்த விசாரணை தொடர்பாக இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானக் கொள்வனவுச் செயல்முறையைச் சூழவுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கிலும் அவர் அண்மையில் சந்தேகநபரானார்.

இந்த பணமோசடி விசாரணை, 2013 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.

விசாரணையாளர்கள் இவ்வழக்கு தொடர்பான சான்றுகளைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி...

சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: அரசாங்கம் உடனடியாக தலையிட சாணக்கியன் எம்.பி அவசர கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா...

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன...

திலித் ஜயவீரவின் ரிட் மனு தொடர்பான உத்தரவு இம்மாதம் 30ஆம் திகதி

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள...