மன்னாரில் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்

Date:

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னாரில் உள்ள இளைஞர்களால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) காலை   இரத்ததான  முகாம்  சிறப்பாக இடம் பெற்றது.
பசியில்லா மன்னார் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் தலைமையில் மாவட்ட வைத்தியசாலையின் முழுமையான பங்களிப்புடன் குறித்த இரத்ததான முகாம்  மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த சேகரிக்கும் பகுதியில் இடம் பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் அதிகளவான இளைஞர்கள் , இளைஞர் கழக அங்கத்தவர்கள் பசி இல்லா மன்னார் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
குறித்த அமைப்பினால் தொடர்சியாக பிரதேச ரீதியில் இரத்த தான நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...