உடம்பில் கொவிட்-19 தடுப்புச் சக்தியை தாங்கிய உலகின் முதலாவது குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.

Date:

கொவிட்-19 இன் அச்சுறுத்தல் நிலை உலக நாடுகள் பலவற்றை இன்னமும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் உடம்பில் கொவிட்-19 தடுப்புச் சக்தியை தாங்கிய உலகின் முதலாவது குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.

கொவிட் தடுப்பூசியின் முதலாவது சொட்டை பெற்றுக் கொண்ட கர்பிணிப் பெண்ணான அமெரிக்காவின் தென் புளோரிடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். கர்ப்பிணிக் காலத்தில் இந்தப் பெண்ணுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டதால் பெரும்பாலும் இந்தக் குழந்தை கொவிட்-19 தடுப்புச் சக்தியோடு பிறந்திருக்கலாம் என தாங்கள் நம்புபவதாக இந்தக் குழந்தையை ஆராய்ந்த இரண்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இது சம்பந்தமான மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை ஊழியரான மேற்படி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் 36 வார கால கர்ப்பிணி பெண்ணாக இருந்தார் என்றும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...