நாடு மீண்டும் முடக்கப்படுமா? | பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன

Date:

ஆகக்குறைந்தது 4 நாட்களுக்கு நாடுமுழுவதும் முடக்க நிலையை அமுல்படுத்தி, வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றுமாலை ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும், தொற்றுநோயியல் விசேட வைத்தியர்களின் குழாமினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என உபுல் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...