வருடாந்த மற்றும் சுற்றுலா போட்டிகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாதிடுவதை இலங்கை அணியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ள 24 கிரிக்கெட் வீரர்கள் நிராகரிப்பதாக அவர்களின் தரப்பை சேர்ந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
புதிய, வீரர்களுக்கான தரப்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை கிரிக்கெட் வீரர்கள் குறித்த கைச்சாத்திட மாட்டார்கள் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் வீரர்கள் கைச்சாத்திட மாட்டார்கள் என்பதுடன், தொடர்ந்தும் வருகின்ற எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் விளையாட ஒப்புக்கொண்டு, கிரிக்கெட் வீரர்கள் கைச்சாத்திட மாட்டார்கள் என கிரிக்கெட் வீரர்களின் பிரதிநிதியான
சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.