கொரோனாவினால் மரணித்த 605 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன!

Date:

கொரோனா தொற்றினால் உயிரிழந்த, 605 பேரின் சரீரங்கள், இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் அசேல குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் குறித்த சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

572 முஸ்லிம்களின் சரீரங்களும், 14 கிறிஸ்தவர்களின் சரீரங்களும், 12 இந்துக்களின் சரீரங்களும், 7 பௌத்தர்களின் சரீரங்களும் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...