அமெரிக்காவில் 12 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டம் | உயிரிழந்த நிலையில் 35 பேர் மீட்பு

Date:

அமெரிக்காவின் தென் புளோரிடாவில் உள்ள சிறிய கடற்கரை நகரான மியாமியில் 12 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஒருவர் உயிரிழந்த நிலையில் 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சாம்பிளேன் டவர்ஸ் என்ற அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் மலைபோல் இடிபாடுகளும் மண்ணும் கிடக்கின்றன. இதில் காணாமல் போன 99 பேர் பட்டியலைத் தயாரித்துள்ள அதிகாரிகள் மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு முழுவதும் இந்த மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவனை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...