செஸ் வரி திருத்தத்துடன் அடங்கிய கட்டளையை பாராளுமன்றத்தில் முன்வைக்க இணக்கம்!

Date:

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பண்டங்கள் ஏற்றுமதி சம்பந்தமான செஸ் வரி திருத்தம் அடங்கிய கட்டளையை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பண்டங்கள் ஏற்றுமதி சம்பந்தமான செஸ் வரி திருத்தம் அடங்கிய கட்டளையை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (01) இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இந்த கட்டளை வர்த்தக அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2021 ஜனவரி 21 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

 

1972 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14(1) பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் வர்த்தக அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட 2210/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஏற்றுமதியின் போதான செஸ் வரி திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

 

கௌரவ வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களின் தலைமையில் வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (01) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 

பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திசாநாயக்க, நலின் பிரனாந்து, மர்ஜான் பளீல் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

இதற்கமைய எதிர்வரும் தினமொன்றில் இந்த கட்டளையை பாராளுமன்ற அனுமதிக்காக முவைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...