வழக்கு விசாரணை தொடர்பாக உயர் நீதிமன்ற அறிவிப்பு

Date:

கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக, மிகவும் அவசரமான, அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் (Open Court) விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அழைப்பாணை அனுப்புவதற்கு  அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹமுத்துகல தெரிவித்தார்.

மேலும், பகீரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைப்பாணை விடுக்க வேண்டிய மிகவும் அவசரமான, அத்தியாவசிய வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்ததன் பின்னர், நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்து அழைப்பாணை விடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணைகள் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகும்.

சம்பந்தப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிபதியின் அனுமதியின்றி நீதிமன்ற அறைக்குள் நுழைய முடியாது. அனைத்து சட்டத்தரணிகளும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹமுத்துகல மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...