அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு மியன்மார் ராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.ஃபிராண்டியர் மியன்மார் ஒன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த ஃபென்ஸ்டர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரைகள் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை மியன்மார் ராணுவம் கடந்த மே மாதம் கைது செய்திருந்தது. ஃபென்ஸ்டர் குடியேற்றச் சட்டத்தை மீறியதாக கூறி 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு தேசத் துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.