சமையல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

Date:

எதிர்வரும் 6 நாட்களுக்குள் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படுமென லிட்ரோ நிறுவனம் இன்று (19) அறிவித்துள்ளது.

அரசு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த நிலை சீராகும் எனவும் சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எந்த குறைபாடும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 6 நாட்களுக்குள் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் குறித்த தொகையை வழங்கக் கூடியதாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...