வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!

Date:

2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை ( 22) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் 2022 ஆம் ஆண்டுக்கான திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.இதற்கமைய வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமான பாராளுமன்றத்தில் 7 நாட்களுக்கு நடைபெறும் விவாதம் நாளை ( 22 ) ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை மறுதினம் (23) முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன் சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறும்.

வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்களிப்பு டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...