மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை – கேகாலைக்கு இடையிலும் கண்டி – நுவரெலியா வீதியிலும், கம்பளை – நாவலப்பிட்டி வீதியிலும் எல்ல – வெள்ளவாய உள்ளிட்ட பகுதியிலும் இந்த அனர்த்த நிலை காணப்படுவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)