Breaking News: இந்திய ராணுவ தலைமை அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது!

Date:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்ற போது ஒரு ஹெலிகொப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.குறித்த ஹெலிகொப்டரில் முப்படைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எதுவும் உறுதியாக பதிவாகவில்லை.

ஹெலிகொப்டர் வீழ்ந்த இடத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.4 சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ,3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரில் 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 4 இராணுவ உயர் அதிகாரிகள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...