சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு!

Date:

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவி சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 2021 டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மன்டபத்தில் நடைபெற்றது.கல்லூரி அதிபர் ஸைனுல் ஹுசைன் வரவேட்புரையுடன் நிகழ்வை துவக்கி வைத்தார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஊடகவியலாளரும், மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தொலைக்காட்சி செய்திவாசிப்பாளருமான ராஷித் மல்ஹார்டீன் புத்தகத்தை வெளியிட்டு வைத்ததுடன் முதற் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் நூல் அறிமுக விழாவை சிரேஷ்ட  ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் நடத்தினார். நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்தனர்.

சஹீரா சமீர் ஆரம்பக் கல்வியை தல்கஸ்பீடியா முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை ஹெம்மாதகமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றதோடு மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரியில் ஊடகக் கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

பவளவிழாக் காண இருக்கும் மடுல்போவை மு.ம.வி இன் பவளவிழாவை நோக்கிய செயற்திட்டங்களில் ஒன்றாகவே இப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...