Update: மெக்சிகோ கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

Date:

மெக்சிக்கோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்துள்ளது.

கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அகதிகள் உட்பட பலரை ஏற்றிக் கொண்டு மெக்சிக்கோவின் சய்பாஸ் மாகாணம் வழியாக அமெரிக்கா எல்லைக்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் ஆபத்தான வளைவை கடக்க முயற்சித்த போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே 53 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு , 58 பேர் படுகாயம் அடைந்ததாகவும் நேற்றைய தினம் (10) தெரிவிக்கப்பட்டது.தற்போது 55 உயிரிழப்புக்கள் மற்றும் 105 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவசர சிகிச்சை பிரிவில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து குறித்து தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகவும் மெக்சிகோ இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...