ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமாக கருதி விடக் கூடாது ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Date:

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாலும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் அந்த வைரஸை சாதாரணமாக கருதக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்புகள் ஏற்பட்டு வந்தாலும், ஒமிக்ரோனின் அதிவேக பரவல் தன்மை தொற்று பாதிப்புகளை சுனாமி வேகத்தில் அதிகரிக்கச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...