நியூயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பலி!

Date:

அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

19 மாடி குடியிருப்பில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு இருந்த குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 32 பேர் உயிருக்கு போராடி வருகின்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் லேசான காயங்களுடன் 60 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://apnews.com/article/bronx-apartment-fire-62afe31a9da544625f65def5f19e15dc&ved=2ahUKEwiw3ens_6b1AhXdlNgFHfe2AMEQ0PADKAB6BAgEEAE&usg=AOvVaw1zo3vafB6I_PCUfRWnBdCW

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...