இந்தியாவை வெள்ளையடிப்பு செய்தது தென்னாப்பிரிக்கா அணி!

Date:

சுற்றுலா இந்திய அணிக்கும்,தென்னாப்பிரிக்க அணிக்கும்மிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.இதற்கமைய, தென் ஆபிரிக்க அணி தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி இந்திய அணியை வெள்ளையடிப்பு செய்தது.

கேப் டவுனில் நேற்று (23) இடம்பெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக குயின்டன் டி கொக் 124 ஓட்டங்களை  பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இந்திய அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந் நிலையில், 288 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களை  பெற்று தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 65 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.அத்துடன், அதிரடியாக துடுப்பாடிய தீபக் சஹர் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் லுங்கி கிடி மற்றும் அண்டிலே பெஹ்லுக்வாயோ தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.ஆட்ட நாயகன் மற்றும் தொடரின் நாயகனாக தென் ஆபிரிக்காவின் குயின்டன் டி கொக் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...