ஒமிக்ரோன் பரவலுக்குப் பின் 5 லட்சம் பேர் பலி; ஆய்வில் தகவல்!

Date:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய  ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட பிறகு, கொவிட்டினால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற கொவிட் தொற்றுகளை விட, பாதிப்புக் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு உலகளவில் கொவிட் பாதிப்பு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட பிறகு, உலகளவில் 5 லட்சம் பேர் கொவிட்டுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல, ஒமிக்ரோன் பரவத் தொடங்கிய பிறகு, உலகளவில் 13 கோடிப் பேருக்கு கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதகாவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இணை நோய் இருந்தவர்களுக்குத்தான் ஒமிக்ரோன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...