இன்று (19) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் கிடைத்தன் காரணமாக இன்று அதிகாலை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனினும், கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.