கஹதுட்டுவ பஸ் விபத்தில் 23 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் படுகாயம்!

Date:

ஹொரணை – கொழும்பு வீதியில் கோரலைம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பெண்கள் 20 பேர் உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் சிறு காயங்களுடன் வெத்தர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...