இரத்மலானை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது: இன்று முதல் இந்திய விமான சேவை!

Date:

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 55 வருடங்களுக்கு பின்னர் இன்று (27) முதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று காலை 08:47க்கு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகைத் தரும் விமான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் 60 டொலர் பயண வரி, 30 டொலர் மாத்திரமே அறவிடப்படவுள்ளது. இதேவேளை, கடந்த 2 வருடங்கள் இயங்காதிருந்த இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.

இலங்கை உள்ளிட்ட 40 நாடுகளுக்கு சொந்தமான 60 விமான சேவை நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவிக்கின்றது.

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவைகள் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...