புத்தாண்டு தினத்திற்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: எரிசக்தி அமைச்சர் உறுதி

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏப்ரல் புத்தாண்டு தினம் நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நிகர்வொன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குதி செய்யத் நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, 215,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளில் அமைச்சிடம் இருப்பதாகக் கூறிய அவர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட இது போதுமானது என்றார்.

இதேவேளை, இந்த வாரத்தில் மேலும் இரண்டு டீசல் ஏற்றுமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர் உறுதியளித்த போதிலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...