ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 2ஆம் இடம்!

Date:

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டி நேற்றையதினம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் அஹமட் நிபால் பெற்றுக்கொண்டார்.

இலங்கை பாடசாலை மட்ட கால்பந்தாட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியை கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உட்பட கல்லூரியின் ஆசிரியர்களும் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கின்றது.

அதேநேரம், அஹமட் நிபால் தனதாக்கிக் கொண்ட இரண்டாவது சிறந்த கோல் காப்பாளருக்கான விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...