எதிர்வரும் வாரம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நீட்டிப்பு!

Date:

எதிர்வரும் வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மற்றைய மின்நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது.

மின்வெட்டு காலத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்புகிறது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...