ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள் – மிரிஹானவில் பரபரப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் தடவை அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அங்கு சற்றுமுன்னர், சிறப்பு அதிரடிப்படையினர் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சற்றுமுன்னர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பிரதேசம் முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...