ஆறு மாகாணங்களுக்கு அதிகமான வெப்ப காலநிலை நிலவும்!

Date:

நாட்டின் மேற்கு, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பகல் வேளையில் அதிக வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்நாட்களில் மேற்படி பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளமையினால் மக்கள் அவதியுறுவதாகவும் அதிகளவு நீர் மற்றும் திரவ பானங்களை பருகுவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுக்க முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை ஏப்ரல் 03ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை மாலை வேளையில் மேல், தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், ஏப்ரல் 15ஆம் திகதிக்கு பின்னர் மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...