தேசிய புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை!

Date:

எதிர்வரும் தேசிய புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரையில் தற்பொழுதுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும்.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் இன்று (9) மற்றும் 17 ஆம் திகதிகளில் விசேட கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படும்.

காங்கேசன்துறையில் இருந்து ரயில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை காலை 6.00 மணிக்கு வந்தடையவுள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் இரவு 7.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 5.05 க்கு பதுளையை சென்றடையும்.

இதேபோன்று, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இன்று (9) மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்திரம் மற்றுமொரு ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் பதுளையில் இருந்து மாலை 08.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.50 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

பெலியத்தைக்கும் மருதானைக்கும் இடையில் 9,10,11,12,16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இத் தினங்களில் மாலை 03.30 க்கு பெலியத்தையில் இருந்து புறப்படும் விசேட கடுகதி ரயில் மருதானையை மாலை 6.57 க்கு வந்தடையும்.

இதேபோன்று 9,10,11,12,16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மருதானைக்கும் வெலியத்தைக்கும் இடையில் மற்றுமொரு விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இத் தினங்களில் இந்த ரயில் மருதானையில் இருந்து காலை 6.05 க்கு புறப்பட்டு பெலியத்தையை காலை 9.17 க்கு சென்றடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...