போராட்டக் களமாக மாறியுள்ள காலி முகத்திடல் : 3ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

Date:

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி நாட்டிற்காக வீதியில் இறங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியாக கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக் களமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்காக நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மும்முரமாக தயாராகி வந்த மக்கள், இம்முறை வித்தியாசமான களத்திற்கு தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

தற்போதைய நெருக்கடியால், இம்முறை புத்தாண்டு உணவுகளின் நறுமணத்தை சுவாசிப்பது கனவாகிவிட்டது.
நாட்டு அரசாங்கம் வெளியேறும் வரை நாமும் செல்ல மாட்டோம் என்ற நோக்கத்தில் தற்போது காலி முகத்திடல் வழமைக்கு மாறாக காட்சியளிக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர முடிவு செய்துள்ளோம்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக காலி முகத்திடலில் 3ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

ஜனாதிபதி பதவி விலகும் வரை வெளியேற மறுத்து காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைத்து பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...