‘சிம்மாசன உரை’ : கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன்

Date:

(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு)

சிம்மாசன உரை

சிங்கம் குகையிலிருந்து
நேற்று
வெளியே வந்தது

அதன் கண்களில்
ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது

அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின்
பயமிருந்தது

ஓநாய்க் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய நரிகளுக்கும்
சுரத்தற்ற குரலில்
அது உபன்னியாசம் வழங்கிற்று

அப்பாவிப் பிராணிகள்
அவதிப்படுவதையிட்டு
தளுதளுத்த குரலில்
கவலை வெளியிட்டது

அவற்றின் நலன் காக்குமாறு
ஓநாய்களிடமும்
நரிகளிடமும்
பரிந்துரை செய்தது

காடு பற்றி எரிவது பற்றியோ
பறவைகள்
அவலக் குரல் எழுப்பி
அலைமோதுவது பற்றியோ
எதுவும் சொல்லாமல்
யாரும் அறிநதிராத தனது குகைக்குள்
மீண்டும் புகுந்து கொண்டது

நேற்று நள்ளிரவில்
மற்றொரு காட்டுக்குத்
தீயிடப்பட்டது

வெக்கை பொறுக்க முடியாத
பிராணிகளதும் பறவைகளதும்
அவலக் குரல்
ஆகாயம் வரை ஒலித்தது…!

Popular

More like this
Related

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...