‘மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறிவிட்டது’:அரசாங்கத்தில் இருந்து மேலும் மூன்று எம்.பி.க்கள் விலகினர்

Date:

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது தீர்மானங்களை அறிவித்து, தற்போதைய ஆட்சிக்கு முன்னர் ஆதரவளித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இனி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அவர்கள் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி.க்களாகவே இருப்போம் என்றும் தெரிவித்தனர்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தனர்.
எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.

இதேவேளை ஆளும்கட்சியில் இருக்கும்போது தனக்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பைசல் காசிம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்த காரணத்தினாலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாலும் தாங்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...