‘நந்தேட ஜங்கியக்’: பாராளுமன்றம் அருகே உள்ளாடை போராட்டம்!

Date:

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்பு தடுப்புகளில் பல ஆண் மற்றும் பெண் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

தேசிய நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளாடைகள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘கோட்டகோகம மற்றும் ஹொரா கோ காம’ எதிர்ப்பு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘நந்தேட ஜங்கியக்’ என்ற தொனிப்பொருளின் கீழ் உள்ளாடைகளை பொலிஸ் தடுப்புகளில் தொங்கவிட்டு சர்வதேச உள்ளாடைகள் இல்லாத தினம் 2022 ஐ கொண்டாடினர்.

‘நந்தேட ஜங்கியக்’ எனும் தொனிப்பொருள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடுவதாகும்.

அதேவேளை “இதுதான் எமக்கு மிச்சம்” எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற நுழைவாயில் ‘ஹொரா கோ காம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மற்றும் சிலர் உள்ளாடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைக் காண முடிந்தது.

உள்ளாடைகளைக் கூட ஆடம்பரப் பொருளாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பறித்த ஆட்சியாளருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...