தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிப்பு!

Date:

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தூரபிரதேச போக்குவரத்தினை இன்றும் நாளையும் மாத்திரமே முன்னெடுக்க முடியும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது குறுகிய தூர போக்குவரத்து சேவைக்காக தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்படும், தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவை இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும்’.

தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கான எரிபொருள் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

எதிர்வரும் நாட்களில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையலாம்.
எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எதிர்வரும் மாதம் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது. தனியார் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...