ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் மே 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (12) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

அதற்கமைய ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தின் விசேட அங்கீகாரத்துடன் பரிசீலிக்க கட்சித் தலைவர்கள் இன்று (12) தீர்மானித்துள்ளனர்.

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, சபாநாயகரிடம் பிரேரணையை முன்வைக்கும் பிரேரணையையும் கட்சித் தலைவர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதன் பின்னர் முதல் பணியாக பிரதி சபாநாயகரை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அவைத்தலைவர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் முன்னாள் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல ஜீவன் தொண்டமான், கெவிது குமாரதுங்க, எம்.ஏ.சுமந்திரன், ஜி.ஜி.பொன்னம்பலம், திலான் பெரேரா, வீரசுமண வீரசிங்க, ரவூப் ஹக்கீம், அசங்க நவரத்ன, மஹிந்த அமரவீர, ரஞ்சித் மத்தும, அரவிந்தன் பத்ம குமார், அங்கஜன், குமார் , கயந்த கருணாதிலக, நிமல் சிறிபால டி சில்வா, அனுரகுமார திஸாநாயக்க, அலி சப்ரி ரஹீம், ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் எம்.முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...