பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை!

Date:

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

அதற்கமைய குறித்த நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் மருந்து, உணவு மற்றும் உரம் வழங்கல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இரு சர்வதேச நிதி நிறுவனங்களின் சந்திப்பை ஒட்டி சர்வதேச மாநாடு ஒன்றை அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல்கள் சாதகமாக அமைந்திருப்பதாக விளக்கமளித்த பிரதமர், எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருள் தேவைக்கு செலுத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் உடனடி சவாலாகும் என்றும் கூறினார்.

வங்கிகளில் டொலர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தேவையான நிதியை திரட்ட அரசு தற்போது வேறு வழிகளை பார்க்கிறது.

இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் எனவும், பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சந்திப்புகளின் பின்னர், நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில் இன்று முழுமையான அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...