பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க சபாநாயகர் பொலிஸாருக்கு உத்தரவு!

Date:

கட்சித் தலைவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வீடுகளுகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசேட பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வழியில் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கட்சித் தலைவர்கள் தமக்கு அறிவித்ததாக அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...