குரங்கு அம்மை நோய் இலங்கையிலும் பரவலாம்!: வைத்திய நிபுணர் தீபால் பெரேரா

Date:

ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்குஅம்மை நோய் இலங்கையிலும் பரவலாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் இந்நோய் பரவியுள்ளதா என்பதை கண்டறியும் மரபணு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தொண்ணூற்று இரண்டு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளவர்களிடம் இருந்து இந்த நோய் பரவக்கூடும் என்றும் அவர் கூறினார்.

சீழ் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும் அவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாட வேண்டியது அவசியமானது எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளை தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பது முக்கியம் என தெரிவித்த விசேட வைத்தியர், அந்த பிள்ளைகளின் மனநலம் மற்றும் போசாக்கு விடயத்தில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...