‘பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களே மீண்டும் பதவியேற்பதால் நாடு மேலும் படுகுழியில்’: முஜிபுர் ரஹ்மான்

Date:

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நேரடியாகக் காரணமானவர்கள் மீண்டும் ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வருவதால் நாடு மேலும் பாதாளத்தில் விழும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் என்று கூறிக்கொண்டு பிரதமர் தலைமையிலான குழுவொன்று நாட்டின் பொறுப்புக்களை ஏற்க முன்வந்தாலும், பழைய பழக்கங்களை உடைத்தவர்களே நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ளனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் நாட்டு மக்களிடமிருந்தோ அல்லது சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கோ எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...