தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை!

Date:

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை என விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவதால் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட்ஜெட்டில் அரசு ஒதுக்கிய பணமும் முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உயிரியல் பூங்காக்களுக்கு உணவு சப்ளை செய்த சப்ளையர்களுக்கு தற்போது ரூ. 59 மில்லியன் செலுத்த உள்ள அதேவேளை இந்த ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் ரூ.120 மில்லியன் தேவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...