அதிக விலையை அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக ஜனாதிபதி கடும் நடவடிக்கை!

Date:

தற்போதைய பொருளாதார நிலைமையைப் பயன்படுத்தி நுகர்வோர் பொருட்களுக்கு அதிக விலையை அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (2) நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்களுக்கு உடனடித் தீர்வு காணும் நோக்கில் நேற்று (2) பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் விரும்பியவாறு நிர்ணயம் செய்வதற்கு இடமளிக்காமல் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் ஊறுநு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை தீவிரமாக பராமரிப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும, பொருட்கள் தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், பற்றாக்குறை இருப்பதாகக் கூறி சில வர்த்தகர்கள் திட்டமிட்டு விலையை உயர்த்தும் முயற்சிகளைத் தடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது, சுட்டிக்காட்டினார்.

மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராமியக் கடைகளுக்குக் கிடைக்கச் செய்வதன் மூலம் கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையிலும், விவசாயிகளுக்கு அதிக விலையிலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...