மே 9 வன்முறைச் சம்பவத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்: தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள ‘மைனா கோ கம’ ஆகிய இரண்டு அமைதியான போராட்டத் தளங்களில் ‘அரச அனுசரணையுடன் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு இன்றுடன் (ஜுன் 9) ஒரு மாதத்தைக் குறிக்கிறது.

அதற்கமைய இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ, தேஷபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இரவு 8 மணிக்குள் கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டார், மேலும் அவர்; தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...